Show all

குற்றாலத்தில் மீண்டும் சீசன் துவக்கம்

குற்றாலத்தில் சீசன் இந்த ஆண்டு காலதாமதமாக தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இந்த நிலையில் நேற்று சாரல் மழை பெய்த வண்ணமாக இருந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று ரம்ஜான் விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து குளித்து மகிழ்ந்தனர். பழைய குற்றாலம் அருவியிலும் ஆயிரக்கணக்கானோர் குளித்து மகிழ்ந்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.