Show all

நூலகம் நடத்தும் பிரபல நடிகை

உதயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இன்றைக்கு கன்னட தேசம் அறிந்த பிரபல நடிகை ரஜினிமகாதேவய்யா.
இவர் இவரின் நண்பர் ராகவேந்திராவோடு இணைந்து கன்னடி அறக்கட்டளை தொடங்கி, அதன் மூலம் ஒரு நூலகம் நடத்தி வருகிறார். ரஜினிமகாதேவய்யா தனது அக்காவோடு 9 வயதில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்கினார். 12வயதிலேயே புகழ் பெற்ற எழுத்தாளர்கள் யு.ஆர்.ஆனந்த மூர்த்தி, குவேம்பு, சிவராம்கரந்த் ஆகியோர் நாவல்களை வாசிக்கத் தொடங்கினார்.

பொறியியல் பட்டதாரியான இவர் வீரபாகு, களத்தூர்கிராமம், கொளஞ்சி ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் நூலகத்தில் இவருடைய குரு பி.ஏ.சிறிதரா வழங்கிய நூல்கள் இவர் வாசித்த நூல்கள் என ஆயிரக்கணக்கில் அணிசெய்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.