Show all

100நாள் வேலைத்திட்ட வேலைக்கு வந்த பெண் மண்கூடையுடன் மயங்கிவிழுந்து மரணம்.

புதுக்கோட்டை திருவரங்குளம் ஊராட்சி பனங்குளம் கிராமத்தில் நடுவண் அரசின் 100நாள் வேலைஉத்தரவாதத்திட்டத்தின்கீழ் குளம் வெட்டும் வேலைக்கு வந்த நடனம் மனைவி ராசம்மாள் வேலை செய்து கொண்டிருக்கும் போதே மண்கூடையுடன் மயங்கி விழுந்து மரணம்அடைந்தார்.

காலை10மணிக்கு இச்சம்பவம் நடந்தும் காலை12 வரையில் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் வெறுப்படைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.காவல் துறையினர் மேல் அதிகாரிகளிடம் பேசுவதாக அளித்த உறுதியில் மக்கள் கலைந்து சென்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.