Show all

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை முதல்வர் ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே திட்டமிட்டுள்ள முக்கிய அலுவல்களை மாற்றி அமைக்க இயலாததால், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என விளக்கமளித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சில நாட்களாக வதந்தியில் இருந்த ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த வினாக்களுக்கு விடை கிடைத்தாற்போல் நேற்று சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்று, 11 நாட்களுக்குப் பிறகு, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்திற்கு பிற்பகல் வருகை தந்தார்.

அங்கு ‌அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1006 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக, ஐந்து பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.மேலும் பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.