Show all

டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் அடித்து நொறுக்கினர்.திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து மது பாட்டிகளை உடைத்தனர். பின்னர் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி முழக்கங்களை எழுப்பினர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.