Show all

+2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நேற்று விநியோகம்

+2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் நேற்று (15-07-2015) முதல் பள்ளிகளில் விநியோகிக்கப்படுகிறது.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற +2 தேர்வுகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், கடந்த மே மாதம் 14ஆம் தேதி வழங்கப்பட்டன.

இந்த தற்காலிக சான்றிதழை ஆகஸ்ட் 6ம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் +2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் மூலமாக, அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தனித் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு எழுதிய மையத்திலேயே மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.