Show all

நாமக்கல் அருகே புதையலை எடுக்க நரபலி முயற்சி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கோணங்கிப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார், கட்டிட மேஸ்திரி. இவரது வீட்டில் தங்க புதையல் இருப்பதாகவும், அதற்கான பரிகார பூஜைகளை செய்தால் புதையலை எடுத்துவிடலாம் எனவும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி சத்தியமூர்த்தி மற்றும் சிலர் ரவிக்குமாரிடம் ஆசைவார்த்தைகள் கூறினர்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக சத்தியமூர்த்தி, தஞ்சாவூரை சேர்ந்த தாமஸ், கரூரை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் ரவிக்குமாரின் வீட்டில் தங்கி பரிகார பூஜைகளை செய்துவந்தனர். இவர்கள் 3 பேரும் மாந்திரீகம் தெரிந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

வீட்டின் பின்புறம் குழிதோண்டி பூஜைகள் செய்ததாகவும் தெரிகிறது.இதனை அறிந்து ஊர் பொதுமக்கள் தர்மஅடி குடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.