Show all

கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கோவையில் கைது

கோவை, உக்கடம், பிலால் நகரை சேர்ந்தவர் பீர்மொய்தீன் இவர், காந்திபார்க், தியாகிகுமரன் வீதியில், மொபைல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று காலை வந்த வடமாநில வாலிபர் ஒருவர், மொபைல்போன் வாங்க, 1,000 ரூபாய் தாளை கொடுத்தார்.அது கள்ள நோட்டு என்பதை தெரிந்து கொண்ட உரிமையாளர், அவரிடம் பேச்சு கொடுத்தபடி, கள்ளநோட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடம் பிடித்து கொடுத்தார். விசாரணையில், பிடிபட்டவர், பீகார் மாநிலம், லக்கிசாராய் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர தாண்டி என தெரிந்தது. அவரிடம் இருந்து, 38 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.