Show all

ஓடும் ரயிலில் கத்தியால் வெட்டி பணம்,நகை பறிப்பு

கேரளாவைச் சேர்ந்த அஸ்லி என்பவர் கொல்கத்தாவில் கடலோரக் காவல் படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரளா செல்வதற்காக ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை ரயில் கொருக்குப்பேட்டை-பேசின்பிரிட்ஜ் இடையே மெதுவாகச் சென்ற போது முகமூடி அணிந்த 6 பேர் ரயிலில் ஏறியுள்ளனர்.

பின்னர் அவர்களை தடுக்க முயன்ற அஸ்லியைத் தாக்கியதோடு மட்டுமில்லாமல் கத்தியால் குத்தியுள்ளனர் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்து சென்றனர். மேலும் மற்றொரு பயணி தனலட்சுமி என்பவரது 2 சவரன் தங்க நகையையும் பறித்து சென்றனர்.
அஸ்லி சிகிச்சைக்காக ஸ்டான்ட்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.