Show all

வேலூரில் கல்லூரி மாணவிகள் டாஸ்மார்க் கடையை எதிர்த்து முற்றுகை

வேலூரில் அரசு மதுபானக்கடையை இடமாற்றம் செய்யக் கோரி முற்றுகையிட்ட கல்லூரி மாணவிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் பில்டர்பெட் சாலையில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தனியார் நர்ஸிங் கல்லூரி உள்ளதால் அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் மதுபானக்கடையை முற்றுகையிட்டனர்.

எச்சரிக்கை விடுத்தும் கலைந்து செல்லாததால், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீசார் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.