Show all

விமானத்தில் நகரும் படிக்கட்டு மோதி சேதம்

சென்னை விமான நிலையத்தில் ஜூலை 10 வெள்ளி காலை பயணிகளை ஏற்ற,இறக்க பயன்படும் ஏரோ பிரிட்ஜ் இடித்ததில் விமானத்தில் 5 செ.மீ. அளவில் ஓட்டை விழுந்து சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தை ஆய்வு செய்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

உடனடியாக சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அந்தமான் செல்லவிருந்த 124 பயணிகளும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.விமானம் சீரமைக்கப்பட்ட பின்னரே மீண்டும் அந்த விமானம் அந்தமான் புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.