Show all

ஊழல் விவகாரத்தில் மௌனம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். 'பிரதமரானால் நானும் ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் செய்ய எவரையும் அனுமதிக்க மாட்டேன்' என அவர் கூறியிருந்தார்.

அப்படியெனில், ராஜஸ்தானில் முறைகேடு நடைபெற நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வர நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? மத்தியப் பிரதேசத்தில் ஊழல் முறைகேடுகளில் சிக்கியுள்ள முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?இந்தக் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்.

மேலும், மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப் பணித் தேர்வு வாரிய முறைகேட்டுக்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.