இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. தீவிரவாதிகளை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மறைமுகப் போர் நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஹவாஜா ஆசிப் இதற்கு பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
டெர்க்கி தாலிபான், பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்தியா உதவியதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் ஹவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து இருதரப்பு உறவை வலுவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அணு ஆயுத மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மோடி - நவாஸ் சந்திப்பு நிகழுமா? எனும் கேள்வி எழுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.