Show all

திருவண்ணாமலை அருகே வீட்டின் வாசலில் திருடிய நகைகள் திருடியவர் கைது

திருவண்ணாமலையில் திருடிய வீட்டின் வாசலில் 120 பவுன் நகையை மறுநாள் கொண்டுவந்து போட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆனந்தன்(பறிகொடுத்தவர்) வீட்டில் டிரைவர் வேலை பார்த்ததாக தெரிகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு ஆனந்தனின் வீட்டு கதவில் ஒரு பையில் 120 பவுன் நகைகள் தொங்கவிடப்பட்டிருந்தது.

அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த பையில் இருந்த நகைகள் ஆனந்தனின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் என்பது உறுதியானது.மேலும் விசாரணையில் அவர் ஆனந்தனின் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் தன்னை கண்காணிப்பதை அறிந்ததும் இந்த சம்பவத்தால் மற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாலும் தான் திருடிய 120 பவுன் நகையை ஆனந்தனின் வீட்டில் வைத்து விட்டதாகவும், மீதம் உள்ள 19 பவுன் நகைகளை தான் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 19 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினர். இதன் மூலம் ஆனந்தனின் வீட்டில் திருடு போன 139 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.