மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நன்கொடைகள் மற்றும் செலவுகளை வெளிப்படையாக தெரிவிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்கனவே பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகள் பொது அதிகார அமைப்புகளாக இருப்பதால், அவைகள் ஆர்டிஐ சட்டப்படி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.