Show all

இரட்டைக்குழல் துப்பாக்கி ஈ.வி.கே.எஸ் விளக்கம்

அதிமுக ஆட்சியை அகற்ற திமுகவும், காங்கிரஸும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.ஆதித்தமிழர் பேரவை சார்பில் சமூக நீதி பாதுகாப்பு மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

மாநாட்டு மலரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.விழாவில் இளங்கோவன் பேசியபோது,
திமுக-வும், காங்கிரஸும் கூட்டணியாக இருக்கிறோம். எதில் இந்தக் கூட்டணி என்றால், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதில் உறுதியாக உள்ளோம்.

அதிமுக ஆட்சியை அகற்ற தேவைப்பட்டால் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுவோம் என்றார் அவர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.