Show all

மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ஒரே வாரத்தில் ரூ.1.08 கோடி வசூல்

சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த 30-ந்தேதியிலிருந்து மெட்ரோ ரயில் சேவை நடந்து வருகிறது. இதில் தொடக்க நாள் அன்று 16.77 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. இதை தொடர்ந்து கடந்த ஒரு வாரக்காலத்தில் 3.26 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

இதன் மூலம் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 1.08 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 1.56 லட்சம் பேர் பயணம் செய்ததில் 48.6 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.