Show all

ஜெயலலிதா வழக்கில் திமுக மேல்முறையீடு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.அன்பழகன் சார்பில் மூத்த வழக்கறிநர் வி.ஜி.பிரகாசம் மனுவை தாக்கல் செய்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கெனவே கர்நாடக மாநில அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக ஆரம்பத்தில் வழக்கு தொடுத்தவர் என்ற முறையில் அன்பழகன் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.