Show all

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, ஞாயிற்றுக்கிழமையன்று தொடர்பு கொண்டு பேசிய மர்ம மனிதர், சென்னை சென்ட்ரலிருந்து புதுதில்லிக்குச் செல்லும் தமிழ்நாடு விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடிக்கும் என தெரிவித்து விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டான்.

இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினர் காவல்துறையினர் விரைந்தனர். அங்கு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, தமிழ்நாடு விரைவுத் தொடர் வண்டியில் வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தீவிர ஆய்வு நடத்தினர்.

தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம மனிதர் குறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலையடுத்து, ரயில் நிலையத்திற்கு பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், அவர்களது உடமைகள் தீவிர சோதனைக்குப் பின்னரே காவல்துறையினர் அனுமதிக்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.