ஜூலை 2 ஆம் தேதி பெல்ஜியத்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. பெல்ஜியத்தில் உலக லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜூலை - 2) நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே பெல்ஜியம் அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தின இரண்டாவது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்தனர். அதை தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் பெல்ஜியம் வீரர்கள் சரியாக பன்படுதிக்கொண்டனர். தொடர்ந்து 41 மற்றும் 53 வது நிமிடங்களில் அடுத்த இரண்டு கோல்களை அடித்தனர். இந்திய வீரர்கள் தங்களுக்கு கிடைத்த 3 பெனால்டி வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தவில்லை. இறுதி வரை ஒரு கோல் குட அடிக்க முடியாமல் 0-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.