Show all

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வீட்டில் அடைக்கலம்

சென்னையில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் குடும்பத்தினரும் தங்களது வீட்டை திறந்து விட்டுள்ளனர். அவர்கள் வீட்டிற்கு அருகில் வசித்த சேரி பகுதியை சேர்ந்த சிலரை தங்கள் வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, போர்வை, விரிப்புகள் ஆகியவற்றை அளித்துள்ளனர். இது தொடர்பாக விஸ்வநாதன் ஆனந்த் மனைவி அருணா கூறுகையில், இது சாதாரணமான உதவி தான். பலர் நிறைய உதவிகள் செய்துள்ளனர். அந்த வகையில், நாங்கள் செய்திருப்பது சிறிய உதவி தான். வீட்டில் தங்கியுள்ளவர்களில் அதிகம் பேர் குழந்தைகள். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, போர்வை ஆகியவற்றை வழங்கினோம். அவர்கள் ஒரு சில நாட்கள் தான் இங்கு தங்கினார்கள். தண்ணீர் வடிந்தவுடன் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டார்கள் என கூறினார். சென்னையில் உள்ள விஸ்வநாதன் ஆனந்த் வீட்டில் சுமார் 15 பேர் வரை தங்கியிருந்ததாகவும் அருணா கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.