Show all

சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா, கொலை முயற்சி புகார்.

டெல்லி மாநில ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்ட மந்திரியும் எம்.எல்.ஏ.வுமான சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா, கொலை முயற்சி புகார் செய்தார். அதன்பேரில் டெல்லி மகளிர் கமிஷன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதற்கிடையில் சோம்நாத் பாரதியின் முன்ஜாமீன் மனு, விசாரணைக் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்து மாவட்ட கோர்ட்டும் சோம்நாத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. அடுத்ததாக டெல்லி ஐகோர்ட்டில் சோம்நாத் முன்ஜாமீன் கோரினார்.  அங்கும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சோம்நாத் பாரதியை கைது செய்வதற்காக போலீசார், அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு சென்றனர். இதற்கிடையில் அவரது வக்கீல் விஜய் அகர்வால், அடுத்த கட்டமாக சோம்நாத்துக்கு முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகப் போவதாக தெரிவித்தார். அதற்குமுன் அவர் போலீஸ் பிடியில் சிக்குவாரா? என்ற பரபரப்பு டெல்லியில் நிலவுகிறது.    


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.