தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்; 12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்; உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில். பிரேசிலின் ரியோ டி ஜெனேரியோவில் ‘சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின்’ உலகக் கோப்பை சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இளவேனில் வாலறிவன். 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இளவேனில் 251.7 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டனைச் சேர்ந்த மெக்கின்டோஷ் சியோனைட் 250.6 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். தைவானைச் சேர்ந்த லின் யிங்-ஷின் 229.9 புள்ளிகள் எடுத்து மூன்றாமிடம் பிடித்தார் . 72 நாடுகளில் இருந்து 541 பேர் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பையில் பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். ‘சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின்’ இணையத் தளத்தில் இளவேனில் வாலறிவன் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இளவேனில் வாலறிவன் தமிழர்கள் பெருமிதம் கொள்வோம். இளவேனில் வாலறிவன் மென்மேலும் வளர்ந்து சாதனை புரிய நமது வாழ்த்துக்கள். வாழ்க இளவேனில் வாலறிவன் அவர்களே! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,259.
(!) இந்தியாவுக்காக ரியோ உலகக்கோப்பையில் பங்கேற்ற இளவேனில் தமிழகத்தில் பிறந்தவர்.
(!) இருபது அகவை இளவேனில் வளரிவான், தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார்.
(!) கடந்த ஐந்து ஆண்டுகளாக துப்பாக்கிச்சுடுதலில் பங்கேற்று வருகிறார்.
(!) கடந்த ஆண்டு நடந்த இளவல் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதல்முறையாக பங்கேற்ற இளவேனில் தங்கம் வென்றார்.
(!) தற்போது முதுவர் பிரிவிலும் முதல்முறையாக உலகக்கோப்பைத் தொடரில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.