Show all

108 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  வியாழன் [05-01-15] அன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.  அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக முரளி விஜய் 75 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 38 ரன்களும், புஜாரா 31 ரன்களும் எடுத்தனர். எல்கர் 4 விக்கெட்டும், இம்ரான் தாஹிர், பிலாண்டர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

தொடந்த தனது முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 184 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்சை ஆடிய இந்திய அணி இரண்டாம் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. தவான் இரண்டாவது இன்னிங்சிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். விஜய் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி 11 ரன்களுடனும் புஜாரா 63 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த கோலி 29 ரன்களுக்கும் புஜாரா 77 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த அனைத்து வீரர்களும் ஒற்றை  இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியாக இதிய அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இம்ரான் தாகிர் மற்றும் ஹார்மர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து 218 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய தென் அப்ப்ரிக்க அணி 109 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 108 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 5  விக்கெட்டுகளையும்,  மிஸ்ரா மற்றும் ஆரோன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.