Show all

இந்தியாவின் ஹீனா சித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்

ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் வருகிற ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்கான ஆசிய கடைசி தகுதி சுற்று துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் நடப்பு உலக சாதனையாளரும், முன்னாள் முதலாம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் ஹீனா சித்து 199.4 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதலில் தகுதி பெற்ற 9-வது இந்தியர் ஹீனா சித்து ஆவார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.