Show all

.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

எங்களுடன் கிரிக்கெட் போட்டிகளை விளையாடுங்கள். இல்லாவிட்டால் ஐசிசி.,யின் ஆதரவை இந்தியா இழக்க நேரிடும் என பாக்., கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.

யு.ஏ.இ.,யில் டிசம்பர் மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எல்லையில் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா எந்த விளையாட்டு போட்டியிலும் பங்கேற்காது என பிசிசிஐ.,யின் செயலாளர் அனுரங் தாகூர் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

அதன் பிறகு பலமுறை முயற்சித்தும் இந்தியா தனது நிலையில் பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று (செப்.,7) வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுங்கள். இல்லாவிட்டால் ஐசிசி.,யின் ஆதரவை இந்தியா இழக்க நேரிடும். அதன் பிறகு எந்த நாடுடனும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்" என மிரட்டல் விடுத்துள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.