Show all

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சேவாக்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷேவாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.

 

ஷேவாக் கடைசியாக 2013–ம் ஆண்டில் ஐதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிட்டவில்லை.

 

36 வயதான ஷேவாக் 104 டெஸ்டில் விளையாடி 23 சதம் உள்பட 8,586 ரன்னும், 251 ஒருநாள் போட்டியில் ஆடி 15 சதம் உள்பட 8,273 ரன்னும், 19 இருபது ஓவர் போட்டியில் ஆடி 394 ரன்னும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்களில் ஷேவாக்கும் ஒருவர். டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை முச்சதம் கண்டுள்ள ஒரே இந்திய வீரர் ஷேவாக் என்பது குறிப்பிடத்தக்கது. 2007–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011–ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.