Show all

வங்கதேச கிரிக்கட் வீரர் ஷஹாதத் ஹொசைன் இடைநீக்கம்

வேகப்பந்து வீச்சாளர் ஷஹாதத் ஹொசைனும் அவரது மனைவியும்  டாக்காவில் உள்ள அவர்களது இல்லத்தில் வேலைப் பார்த்துவந்த 11 வயது சிறுமியை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து  அவரை இடைநீக்கம் செய்துள்ளது.

தலைமறைவாகியுள்ள ஷஹாதத் ஹொசைனை தேடிவருவதாக காவல்துறை கூறுகின்றது. அவர் துன்புறுத்தி துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஹொசைனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தமது பெயருக்கு களங்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளதாக கிரிக்கெட் வாரியம் கூறுகின்றது. தான் குற்றமற்றவர் என்பதை அவர் தான் நிரூபிக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

வங்கதேசத்தில் வீட்டு வேலையாட்கள், பெரும்பாலும் சிறார்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.