Show all

புதுமுக நடிகர், நடிகையருக்கான நேர்முகத்தேர்வு வருகிற 17ம் தேதி சென்னையில்...

சன் தொலைக்காட்சியில், திருமுருகன் இயக்கத்தில் எடுக்கப்பட உள்ள புதிய தொடரில் நடிப்பதற்கு புதுமுக நடிகர், நடிகையருக்கான நேர்முகத்தேர்வு வருகிற 17ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்முரசில் வெளியாகும் கூப்பனுடன் செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.  

சின்னத்திரை இயக்குனர் எம்.திருமுருகனுக்கு முதன் முதலாக தயாரிப்பாளராகும் வாய்ப்பு சன் தொலைக்காட்சியின் மூலம் கிடைத்தபோது, திரு பிக்சர்ஸ் என்ற தனது நிறுவனத்தின் மூலம் “நாதஸ்வரம்” என்னும் மெகா தொடரை ஆரம்பித்தார். இதில் முழுவதும் புதுமுகங்களை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய நகரங்களில் 2009 டிசம்பர் மாதம் நாதஸ்வரம் தொடருக்கான புதுமுகங்கள் தேடல் விளம்பரம் தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட புதுமுகங்களை கொண்டு 2010ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி முதல் நாதஸ்வரம் தொடர் சன் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்ப தொடங்கி 9.5.2015ல் முடிவடைந்தது.

தினகரன் நாளிதழின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுமுகங்களைக் கொண்டு கின்னஸ் சாதனை படைத்தது மிக பெருமையான விஷயமாகும். இந்நிலையில், சரித்திரம் மீண்டும் திரும்புவது போல், ஒரு அரிய வாய்ப்பு 6 ஆண்டுகளுக்கு பின் தமிழ்முரசு நாளிதழ் மூலமாகவே வருகிறது. ஆம்,  சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரை ‘திரு பிக்சர்ஸ்’ தயாரிக்கிறது. அதுவும் முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டே  (அனைத்து வயதிலும்)  தயாரிக்கப்பட இருக்கிறது. எவ்வாறு இந்த துறைக்குள் நுழைவது என வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் திறமையான கலைஞர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. மும்பையிலும் தமிழகத்தில் காவிரி படுகையிலுமாக கதை ஆரம்பிக்கிறது. எனவே, படப்பிடிப்பும் அங்கு நடத்தப்பட இருக்கிறது.

கதை, திரைக்கதை இயக்கம்- எம்.திருமுருகன்,

ஒளிப்பதிவு- சரத் கே.சந்திரன்,

இசை- சஞ்சீவ் ரத்தன்,

வசனம்- ஆறுமுகத்தமிழன்,

எடிட்டிங்- பிரேம்.

தமிழ்முரசில் வெளியாகும் கூப்பனை தவறாமல் சேகரித்து, விண்ணப்பத்துடன் இணைத்து கொடுத்தால்தான் நேர்முகத்தேர்வுக்கு அனுமதி அளிக்கப்படும்.   

இம்மாதம் புதுமுகத் தேர்வு நடைபெறும் இடத்தின் விவரம்:

இடம்: தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி,

கே.கே.நகர்,

சென்னை-600 078.

நேரம்: 17ம் தேதி, காலை 9.30 மணி முதல்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.