Show all

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷாகதத் ஹூசைனை போலீஸ் தேடுகிறது

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷாகதத் ஹூசைனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஷாகதத் ஹூசைன் வீட்டில் வேலை பார்த்த 11 வயது சிறுமி, ஷாகதத் ஹூசைன் மற்றும் அவரது மனைவி மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கிரிக்கெட் வீரர் ஷாகதத்தும், அவரது மனைவியும் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த வேலைக்கார சிறுமியின் உடலில் காயம் இருந்ததால் சிகிச்சைக்காக டாக்கா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் தனது வீட்டில் வேலை செய்த சிறுமியை காணவில்லை என்று ஷாகதத் ஹூசைனும் போலீசில் புகார் செய்து இருக்கிறார்.சிறுமியின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து உள்ள போலீசார், கிரிக்கெட் வீரர் ஷாகதத் ஹூசைனை வலைவீசி தேடிவருகின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.