Show all

டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் விடுதலையை எதிர்த்து டெல்லி காவல்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறை ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா உள்பட 36 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி நீனா பக்வல் கிருஷ்ணா குற்றம் சாட்டப்பட்ட 36 பேரையும் சூதாட்டத்தில் ஈடுபட்டதிற்கு, போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுவித்து கடந்த ஜூலை 25ஆம் தேதி உத்தரவிட்டார்.

சூதாட்ட வழக்கில் இருந்து விடுக்கப்பட்டாலும் ஸ்ரீசாந்த், சவான் மீதான தடையை நீக்க கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது. இந்நிலையில் ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் உள்பட 36 பேர் விடுதலையை எதிர்த்த காவல்துறை, டெல்லி உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்துள்ளது.

டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்ததில் பல்வேறு தவறுகள் இருப்பதாக மேல்முறையீட்டு மனுவில் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.