Show all

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து

24–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் பி வி சிந்து மற்றும் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் ஆகியோர் மோதினர். 

பரப்பப்பட நடைபெற்ற இப்போட்டியில் கரோலினா மரின்  21-19, 21-10 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி வி சிந்து. கடந்த ஆண்டும் இதே போல் இறுதிப் போட்டியில் தோலிவியடைந்து  வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை செய்துள்ளார் பி வி சிந்து. மேலும் மூண்டாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் வெல்லும் முதல் வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.