Show all

மக்காவ் ஓபன் பாட்மிண்டன்: பி.வி.சிந்து தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்

சீனாவின் மக்காவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிந்து 21-9, 21-23, 21-14 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த ஜப்பானின் மினட்சு மிடானியை தோற்கடித்தார். 1 மணி, 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த சிந்து ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடினார்.

அதனால் மக்காவ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இந்த ஆண்டில் சிந்து வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுதான்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.