Show all

கோலி அபார சத்தத்தால் முதல் இன்னிங்சில் 274 ரன்கள் குவித்தது இந்தியா

இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 1) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 285 எடுத்திருந்தது. 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அஷ்வின் 4 விக்கெட்டுக்களையும், ஷமி 3 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக கைப்பற்றினர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 80 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ  70 ரன்களும் குவித்தனர்.

அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி சார்பில் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணி சார்பில் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடி 225 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற அனைவரும் சொற்ப ரங்களிலேயே ஆட்டமிழந்தனர். இறுதியா இந்தியா முதல் இன்னிங்சில் 274 ரன்கள் அடித்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாம் குர்ரான் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

அதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒருத்தி விக்கெட் இழப்புக்கு  9 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 22 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.