Show all

கேரள உயர்அறங்கூற்றுமன்றம் நெத்தியடி! வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் வங்கியே பொறுப்பு

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போனால், அதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய வங்கியே பொறுப்பு ஏற்க வேண்டும் என கேரள உயர்அறங்கூற்று மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர், இந்திய மாநில வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது கணக்கில் இருந்து திருட்டுத்தனமாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதை தனக்கு திருப்பித்தர வங்கிக்கு உத்தரவிடக்கோரி, வாடிக்கையாளர் நடுவர்மன்றில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து கேரள உயர்அறங்கூற்று மன்றத்தில் இந்திய மாநில வங்கி மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த அறங்கூற்றுவர் சுரேஷ் குமார், அம்மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு அளித்தார். அவர் கூறியதாவது:

வாடிக்கையாளருக்கு வங்கி சேவை அளிக்கிறது. எனவே, அவரது நலன்களை பாதுகாப்பது வங்கியின் கடமை. அவரது கணக்கில் இருந்து பணம் திருடு போனால், அதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய வங்கியே பொறுப்பு ஏற்க வேண்டும். வங்கிகள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. வங்கிகள் சேதிகள் அனுப்பி உசார்படுத்தினாலும், அதை வைத்து தப்பித்துக்கொள்ள முடியாது. என்று நெத்தியில் அடித்தாற் போல் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,056.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.