இலங்கையின் 70 வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா பங்குபெறும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் நான்காவது போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. மேலும் நேற்று நடைபெற்ற ஆட்டம் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சுமார் ஒருமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதையடுத்து ஆட்டத்தின் ஓவர்கள் 19-ஆக குறைக்கப்பட்டது. டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மெண்டிஸ் 38 பந்தில் 55 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் தாகூர் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் உனட்கட், சாகல் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதையடுத்து, 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோஹித் 11 ரன்னிலும் தவான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். ராகுல் (18) மற்றும் ரெய்னா (27) ஓரளவு தாக்கு பிடித்தனர். எனினும் இறுதியாக 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டே மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணையை வெற்றி பெற செய்தனர். இந்திய அணி 17.3 ஓவரில் 153 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மணிஷ் பாண்டே 42 ரன் மற்றும் தினேஷ் கார்த்திக் 39 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷர்துல் தாக்குர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.