Show all

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை வென்றது இந்தியா

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளை இந்தியா வென்றுள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி மவுண்ட் மாங்கானுயில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்கள் குவித்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் சாமி மூன்று விக்கெட்டுகளையும், புவனேஷ், சாகல் மற்றும் பாண்டயா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களறமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்த இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 62 ரன்களும், கோலி 60  ரன்களும் குவித்தனர். ராய்டு 40 ரன்களுடனும் மற்றும் கார்த்திக் 38 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.