Show all

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாளை 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. பிரிஸ்பெனில் நடைபெறும் இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.

ஆல் ரவுண்டர் மிச்செல் மார்ஷ்-சுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக கனே ரிச்சர்ட்சன், ஜான் ஹேஸ்ட்டிங்ஸ் ஆகியோரில் ஒருவர் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

பிரிஸ்பென் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் போட்டியில் சுழற்பந்து வீச்சு எடுபடாததால் பந்து வீச்சாளர்களில் மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.