Show all

தவறான குற்றச்சாட்டுகளுக்காக அவமானத்தால் தலைகுனியுங்கள் நண்பர்களே... என கூறிய ராதிகா

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் நடிகருமான  சரத்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது என் மீதான முறைகேடு புகார்கள் என்னை காயபடுத்தின.என் மீதான புகார்கள் முறைகேடுகள் புகார்களில் உண்மையில்லை.  எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.  தேர்தலில் வெற்றி பெற்ற பின் இந்த ரத்து செய்யபட்ட விஷயத்தை அறிவிக்க இருந்தேன். கடந்த செப்டம்பர் மாதம் 29 ந்தேதியே ஒப்பந்தம் ரத்து செய்யபட்டு விட்டது. புதிய நிர்வாகிகளுக்கு எந்த நேரத்திலும் உதவ தயார். வெற்றி தோல்வியை வாழ்க்கையில் பல முறை சந்தித்து விட்டேன்.என கூறி இருந்தார்.

 

இதை தொடர்ந்து சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா தனது டுவிட்டரில் உணர்வுபூர்வமான கருத்தைத் வெளியிட்டு உள்ளார்.

 

தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தவறான குற்றச்சாட்டுகளுக்காக அவமானத்தால் தலைகுனியுங்கள் நண்பர்களே... சரத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று ராதிகா ட்வீட் செய்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.