Show all

அலிம்தார், சோயப் அக்தர் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் எஞ்சிய போட்டிகளுக்கு கிடையாது

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை, மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடக்க இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தியதால், பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

 

அதனால் தற்போது நடந்து வரும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறும் இடங்களில் சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால்  நடுவராக பணியாற்றி வரும்  பாகிஸ்தானை சேர்ந்த அலிம்தாரை ஐசிசி திரும்ப பெற்று கொண்டுள்ளது.

 

அதேபோல் கடைசி ஒரு நாள் போட்டிக்கு வர்ணனையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சோயப் அக்தர், வாசிம் அக்ரம் ஆகியோரும்  விலகியுள்ளனர்.  ஆனால் இது அவர்களின் சொந்த முடிவு என கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.