Show all

5 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் பவாத் ஆலம்

இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 3 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்சில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் அபுதாபியில் அக்டோபர் 13-ந் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இடக்கை பேட்ஸ்மேன் பவாத் ஆலம் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கடைசியாக விளையாடிய பவாத் ஆலமுக்கு அதன் பிறகு அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது முதல் தர போட்டிகளில் தொடர்ந்து ரன் குவித்து வருவதன் மூலம் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.