Show all

ஜிம்பாப்வேவுக்கு எதிராக 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் செப்டம்பர் 27 நடைபெற்றது.முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 35 ரன்களும், முகமது ரிஷ்வான் 33 ரன்களும் எடுத்தனர்.

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி, தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும்  பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிமின் மாயாஜால சுழற்பந்தை சமாளிக்க முடியாமல், ஜிம்பாவே அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது.

ஜிம்பாவே அணியில் அதிகபட்சமாக சிகும்புரா 31 ரன்களும் ஹேமில்டன் 25 ரன்களும் எடுத்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான  இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.