ஒலிம்பிக் மற்றும் உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரான விஜேந்தர்சிங் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களம் இறங்கி தனது புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறார். விஜேந்தர்சிங்கை இங்கிலாந்தை சேர்ந்த குத்துச்சண்டை மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. விஜேந்தர்சிங் தனது முதலாவது தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த வீரர் சோனி ஒயிட்டிங்கை சந்திக்கிறார். இந்த மோதல் இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டரில் வருகிற 10-ந் தேதி அரங்கேறுகிறது. இது குறித்து விஜேந்தர்சிங் கூறுகையில், ‘சோனி ஒயிட்டிங்குக்கு எதிரான போட்டி எளிதானது அல்ல என்பது எனக்கு தெரியும். ஏற்கனவே அவர் 3 பந்தயங்களில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர். முதலாவது தொழில்முறை போட்டியில் என்னை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் சோனி இருக்கிறார் என்பதை கேள்விப்பட்டேன். ஆனால் அவரால் என்னை வீழ்த்த முடியாது’ என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.