20 வயதான டெபோரா, மகளிர் எலைட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். மகளிர் எலைட் பிரிவில் மலேசியாவின் முன்னணி வீராங்கனையை தோற்கடித்த அவர், முதல் தங்கத்தை கைப்பற்றிய முதல் இந்திய சைக்கிள் வீராங்களை ஆவார். கெய்ரின் பிரிவில் டெபோரா, மற்றொரு தங்கம் வெல்லும் வாய்ப்பு நழுவியது. இந்நிலையில் பாங்காக்கில் அக்டோபர் 9 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள யுசிஐ போட்டி, தில்லியில் வரும் நவம்பர் 18-20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டி மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான போட்டி ஆகியவற்றிலும் டெபோரா பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.