இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சென்னையின் எஃப் .சி அணியை 3 - 2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி வீழ்த்தியது. இந்நிலையில் இரண்டாவது லீக் போட்டி கோவாவில் நேற்று இரவு நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே கோவா அணியின் மந்தர் ராவ் தேசாய் முதல் கோலை அடித்து அணிக்கு வலுசேர்த்தார். 44-வது நிமிடத்தில் ரெய்னால்டோ கோல் அடிக்க கோவா அணி முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பகுதி நேரத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.