Show all

உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் வரும் மே மாத இறுதியில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 12-வது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூடத்தில் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சகால், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது சமி மற்றும் ரவிந்திர ஜடேஜா.

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ஐசிசி, அனுமதி இல்லாமலேயே வரும் மே 23ம் தேதி வரை பிசிசிஐ மாற்றம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.