Show all

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா

T20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றியும், இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையிலும், ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் கை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் க்ருனால் பாண்டயா நான்கு விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

அதைத்தொடர்ந்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் 23 ரன்களும், தவான் 41 ரன்களும் குவித்து சிறப்பான தொடக்கத்தை தந்தனர். அதன்பிறகு வந்த கோஹ்லியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 19.4 ஓவர்களில் 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி 61 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 22 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.