Show all

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் போராடி தோல்வி அடைந்தது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று பிரிஸ்பைன் நகரில் நடைபெற்றது.

 

இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடியது. மலை குறுக்கிட்டதால், ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து, டக்வொர்த் லூவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு ஆடிய இந்திய அணி எவ்வளவு போராடியும் 17 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 76 ரன்களும் தினேஷ் கார்த்திக் 30 ரங்களும் குவித்தனர். இந்த வெற்றி மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.