Show all

இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் அட்டப்பட்டு

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி 22 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றும் சாதனை படைத்தது.

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களில் பாகிஸ்தான், இந்தியா அணிகளுக்கு இடையே அடுத்தடுத்து இலங்கை அணி தொடரை இழந்தையடுத்து, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பதவி வகித்த மார்வன் அட்டப்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான சந்திக்கா ஹதுரசிங்கே நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.