Show all

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி; இந்திய வீராங்கனை அயோனிகா பால் வெண்கலம் மற்றும் அபினவ் பிந்த்ர

8-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. வருகிற 30-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 14 நாடுகளை சேர்ந்த 180 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க நாளான நேற்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் சாம்பியனான இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றார். 2-வது நாளான இன்று இந்திய வீராங்கனை அயோனிகா பால் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 2014 காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்  அயோனிகா பால். மற்ற இந்திய வீராங்கனைகளான பூஜா கத்கர், அபூர்வி சந்தெலா ஆகியோர் 5-வது மற்றும் 8-வது இடத்தை பிடித்துள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.